ஒரு
நண்பகல்
நகர்வு.
சொற்களினூடே
பயணிக்கிறேன்.
நகர்வுகளில்
நன்மையேதுமில்லை.
சொல்லாழத்தில்
முகிழ்த்து,
மூழ்கியிருந்த
தருணம்,
நகர்வுகளில்
மந்தம்.
தலைகவிழ்ந்த
தலையொன்று
நகர்வுப்
பாதையின் குறுக்கே
மந்தகாசமாய்
படுத்திருந்தது.
தலையின்
நடுவில்
கொம்புகள் முளைத்திருந்தன..
கொம்புகளில்
நகர்வை
நிறுத்தப்புகும் ஆவேசம்.
தன்சுயம்
தோற்ற
தன் கொம்புகளால்
அது
சுயமிழந்திருந்தது..
என்
நகர்வுகளில்
வேகம்.
கொம்புகளின்
எக்காளம்.
என் நகர்வுகளில்
எதிரெதிராய்
நானும்
அக்கொம்புகளும்.
உணர்த்தலில்லா
தடைகளற்ற
இளமைச்
சமமின்மையில்
கொம்புகளில்
குதூகலம்.
பின்னொரு
நண்பகல்
நகர்வில்
தன்சுயமிழந்த
கொம்புகள்
ஏதோ ஒரு
நகர்வினால்
வெட்டப்படலாம்..
அப்போது
தலைகவிழ்ந்திருக்கும்
தலை
தலைநிமிரச்
சற்று சிரமாயிருக்கும்.
--- சி.குருநாதசுந்தரம்.
அருமை தோழர்
ReplyDeleteநன்றி. அஞ்ஞாடியின் நகர்வு எப்போது ??
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Delete